Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2015 மே 07 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (7) மட்டக்களப்பு நகருக்கு வருகை தந்தனர்.
அறிவைப் பெறுவதற்காக புத்தகத்தில் உள்ள பாடங்களைப் படிப்பது மட்டுமன்றி பாடங்களில் படிப்பவற்றை நேரடியாகப் பார்ப்பதன் மூலம் இலகுவில் மாணவர்களிடத்தில் பதிவதனால் இத்தகைய கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு வந்ததாக மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பான ஆசிரியைகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு மரபுரிமைமிக்க இடங்களான டச்சுக் கோட்டை, மட்டக்களப்பு கேற், வில்லியம் ஓல்ட்டின் உருவச் சிலை, சாரணிய ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச் சிலை, மகாத்மா காந்தியின் உருவச் சிலை, சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலை, வானிலை அவதான நிலையம், நகர வாசிகசாலை, காந்திப் பூங்கா, நீரூற்றுப் பூங்கா, யூனியர் பூங்கா, பாலமீன்மடு வெளிச்ச வீடு என்பவற்றைப் பார்வையிட்டதாகத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள குறித்த மரபுரிமை மிக்க இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவுபடுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago