Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ச்சியான பெய்த கடும் மழையால் அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் அளவுக்கு உயர்வடைந்துள்ளது.
இது தொடர்பில் கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, ஜா - எல், மினுவாங்கொடை, கம்பஹா ஆகிய பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா - ஜா-எல வீதி மற்றும் கம்பஹா - மினுவாங்கொடை வீதி ஆகியவற்றின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago