2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அமெரிக்கா பாராட்டு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக அலுவலகமொன்றை நியமிப்பதற்கான சட்டமூலத்தை, இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளமைக்கு, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பொன்றை பதிவேற்றியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், 'இலங்கை அரசாங்கமானது, மிகவும் பயன்மிக்க நல்லிணக்கச் செயற்பாடொன்றை முன்னெடுத்து வருகின்றது. இதுவொரு வரலாற்று வெற்றியாகும்' என்று மேலும் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், 'உண்மை மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை நல்லதொரு அணுகுமுறைக்குள் கொண்டுசெல்வதற்கு, இதுவரை இருந்த தடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை, இலங்கையின் வரலாற்றுத் தடமாகக் கருத்திற்கொள்ள முடியும் என, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் டொம் மெலினொஸ்கி, தனது டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5