2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அரசவை தகர்ப்பு: விசாரணைக்கு நிபுணர் குழு நியமனம்

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு பிரதமரால் ஐவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனை, கலாசார மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் கடந்த 14 ஆம் திகதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .