2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

6 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Freelancer   / 2025 ஜூன் 17 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை  நாளை புதன்கிழமை (18) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - பாதுக்கை பிரதேச செயலகப் பிரிவு
களுத்துறை - அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலின்தநுவர மற்றும் புலத்சிங்கள உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் 
கண்டி - மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு
நுவரெலியா - அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு
கேகாலை - தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் 
இரத்தினபுரி - குருவிட்ட , எஹெலியகொடை, பெல்மடுல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .