Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் சடலங்களை, தகனம் செய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை, மீள் பரிசோதனை செய்யுமாறு, தேசிய சமாதானப் பேரவை, இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.
கொவிட் – 19ஆல் உயிரிழந்தவர்களின் உடலை, தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்புடைய ஒழுங்குவிதியை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், சமய நம்பிக்கைகளுக்கு அமைவும் நாட்டில் ஒரு பகுதி மக்களின் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் இல்லை என்றும் அத்துடன், ஒரு பகுதி மக்களை பாதிப்பதாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தத் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு, முஸ்லிம் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து, விஞ்ஞான நிலைப்பாட்டை கருத்தில் கொள்வது, அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19ஆல் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்தல், தகனம் செய்தல் ஆகிய இரண்டு முறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி, அதை பல நாடுகளும் கடைபிடித்து வருகின்ற நிலையில், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்துக்கு முரணமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago