2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரச அதிகாரிகளுக்கு விசேட காப்புறுதி

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று தொடர்பாக, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், விரு அபிமன் எனும் பெயரில் விசேட காப்புறுதித் திட்டமொன்று 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொவிட் – 19 நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும்போது, உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொவிட்-19 சுகாதார சமூக நிதியத்துக்கு 50 இலட்சம் ரூபாய் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .