2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அர்ஜுன, தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

S.Renuka   / 2026 மார்ச் 23 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக  திங்கட்கிழமை (23) அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து, தலா ரூ.5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது.

கடந்த 2017 – 2018 காலப்பகுதியில், ஆறு மாத காலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து விட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையிலான 27 உடனடி டெண்டர்களை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் ரூ.800 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .