2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘அறிக்கை விரைவில் கையளிக்கப்படும்’

Editorial   / 2020 ஜூலை 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரில் காணப்பட்ட பழமை வாய்ந்த, புவனேகுபா மன்னனின் ராஜசபை கட்டடத்தை உடைத்த சம்பவம் ​தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ​தொடர்பான அறிக்கையை, விரைவில் கையளிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய, பிரதமரால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவால் வழங்கப்படும் அறிக்கையை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ள இந்த குழுவின் தலைவரான செனரத் திசாநாயக்க, முழுமையான அறிக்கையை நாளைய தினம் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .