2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அளுத்கம பகுதியில் வேன் - ரயில் விபத்து : பெண் படுகாயம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று (09 ) காலை சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள  ரயில் கடவையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் குறித்த வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்து, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .