2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆசனவாயில் தங்கம்: எழுவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரிலுள்ள கெம்பேகொவ்த சர்வதேச விமானநிலையத்திலிருந்து 65 இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 2 கிலோகிராம் தங்கத்தை, தங்களது ஆசனவாயிலில் வைத்து கடத்துவதற்கு முயற்சி செய்த 7 இலங்கையர்களை, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஆறு பெண்கள் அடங்குவதாகவும் அதில் ஒருவர் மாத்திரம் தங்க வலையல் ஒன்றை தனது தலைமுடியில் மறைத்து வைத்துக்கொண்டு வந்ததாகவும் தெரியவருகின்றது. இந்த ஆறு பேரையும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கொண்டு போய் விடுவதற்காக விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த, இந்தக் குழுவை கையாளும் நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் சென்னையிலிருந்து மற்றைய ஆசிய நாடுகளுக்கு தங்க கடத்தல் மோசடியில் ஈடுபடும் சர்வதேச குழுவின் ஒரு பகுதியினர் என்றும் இவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள், விமான டிக்கெட்டுக்கள் அனைத்தும் வழங்கப்பட்டு இந்த கடத்தலுக்காக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5