S.Renuka / 2026 ஜனவரி 26 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}



இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழாவில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றியதும், தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.
இதன்பின்னர், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்து செய்தியினை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாசித்தார்.
இதன்போது, இந்திய கலாசாரத்தை பறைச்சாட்டி நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago