2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்தியா - கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து

Freelancer   / 2025 ஜூலை 04 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயமாக கானாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7 ஆம் திகதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்​கட்​ட​மாக, மேற்கு ஆபிரிக்க நாடான கானா தலைநகர் அக்​ரா​வுக்கு பிரதமர் மோடி கடந்த 2 ஆம் திகதி சென்​றார். கானா ஜனாதிபதி ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்​போது இரு நாடுகள் இடையே கலாச்​சா​ரம், தரநிலை சான்​று, ஆயுர்​வேதம், பாரம்​பரிய மருத்​து​வம் தொடர்​பாக 4 முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .