Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Simrith / 2025 மே 14 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்டாறியோவின் பிரம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்தார்.
"ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்" என்று கூறி அதற்கு அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை ஹேரத் தெரிவித்தார், மேலும் நினைவுச்சின்னத்தின் நிர்மாணத்தையும் விமர்சித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அதன் பல்வேறு சமூகங்களிடையே நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
மே 10 அன்று நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதற்கு தமிழ் புலம்பெயர்ந்த குழுக்கள் மற்றும் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட கனேடிய அதிகாரிகள் ஆதரவு அளித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago