2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இன்று கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு மட்டுபாடு

Editorial   / 2019 ஜூன் 09 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையையொட்டி கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 11 மணியிலிருந்து 12 மணி வரையும் பகல் 1.45 மணியிலிருந்து 3.30 மணி வரையும் கட்டுநாயக்க ​– ​கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வீதிகள் சிலவற்றில் வாகனப் போக்குவரத்து மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க -கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, பொரல்ல, தாமரைத் தடாகச் சுற்றுவட்டம் ஊடான காலி வீதி, ஜனாதிபதி மாவத்தை வரையும் பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை ஜனாதிபதி மாவத்தையிலிருந்து தாமரைத் தடாகச் சுற்றுவட்டம், பொரல்லை ஊடாக கட்டுநாயக்க வரையான வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .