2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண் படுகொலை தொடர்பாக இரட்டையர்கள் கைது

Janu   / 2025 ஜூன் 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடூரமாக கொலை செய்யப்பட்டு,  சடலமாக மீட்கப்பட்ட  குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான  இரட்டையர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான   38 வயது மதிக்கத்தக்க மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண்  கடந்த மே மாதம்  வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண் மீது கழுத்து  பகுதியில்   காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு   தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக   ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த அம்பாறை பொலிஸார் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன்,  சம்பவம் நடைபெற்ற வீட்டில்  பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி  (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால்  எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .