2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

இரத்மலானையில் 100 கிராம் ’ஐஸ்’ : ஒருவர் கைது

Editorial   / 2026 மார்ச் 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எச். எம். சியாஜ்

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, 100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடந்த திங்கட்கிழமை (09.03.2026) இரத்மலானை பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதியில் போதைப்பொருள் விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் பணியில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .