Editorial / 2026 மார்ச் 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, 100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதியில் போதைப்பொருள் விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் பணியில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago