Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான வானிலையின் காரணமாக, இன்று (02) இரவு முதல், பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்று இரவு தொடக்கம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலும் உள்ள கடற்கரையோர பிரதேசங்கள் மற்றும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை பொத்துவில் ஆகிய கடற்கரை பிரதேசங்களிலும் காற்றின் வேகம் 45 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago