2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படும் பெண்களுக்கான விதிமுறை

Janu   / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயதுக்கு மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு சேவை ஊழியர்களை மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பணி அமர்த்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவின் கையொப்பத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

வர்த்தமானியின்படி, பணி நேரத்தின் போது அல்லது அதற்குப் பிறகு பணியாளரின் குடியிருப்புக்கு பொருத்தமான தங்குமிடம் அல்லது போக்குவரத்து வசதிகளை முதலாளி வழங்க வேண்டும்.

கூடுதலாக, இந்த ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பொது நலனுக்கு முதலாளி பொறுப்பேற்கிறார் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X