2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’இராஜினாமா செய்தாலும் அவதானம் தேவை’

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தத்தமது இராஜினாமா செய்வதற்காக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எடுத்த முடிவு, இனங்களுக்கிடையில் மோசமான முனைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில், அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியதாக, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் ​தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், இன்று (08) இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறியதாக, முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

நாட்டில் இனங்களுக்கு இடையில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுவதற்கு, தாம் இடம்கொடுக்கப் போவதில்லை என்பதை, எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்ஷ, முன்னின்று பேச வேண்டும் என்றும்  அதனூடாக, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு அவர் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .