Editorial / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் மருத்துவ வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளமை மருத்துவ உலகிற்கே ஆச்சர்யமூட்டியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு பெண், ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
இந்த கருப்பை, உயிரிழந்த பெண்ணொருவரிடமிருந்து தானமாக பெறப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை, லண்டனில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது கருப்பை இல்லாத பெண்களுக்கு தாயாகும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
“இது மருத்துவ துறையில் மிகப்பெரிய முன்னேற்றம். உயிரிழந்த பெண்ணொருவரிடமிருந்து கருப்பை மாற்றம் செய்து, குழந்தை பிறந்தது உலகளவில் மிக அரிதான சாதனை” என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை, பல்வேறு சிக்கலான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் IVF முறையின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளதாகவும், தாயும் நலமாக உள்ளதாகவும் வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
மருத்துவ நிபுணர்கள், இந்த சாதனை எதிர்காலத்தில் குழந்தை பெற முடியாத பெண்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில் உலகளவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மிகக் குறைவாகவே நடந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்த வெற்றி, மருத்துவ வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .