2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இலங்கைக்கு நேசக்கரம் நீட்டிய தமிழக சிறுமி

Nirosh   / 2022 மே 08 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நிருபர்

தமிழக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  சிறுமி ஒருவர் தனது சேமிப்பில் இருந்த 4,400 இந்திய ரூபாயை இலங்கை மக்களுக்காக வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பில்சா சாரா என்கிற பாடசாலை மாணவியே தனது சேமிப்பில் வைத்திருந்த பணத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளார்.

தற்போது இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு, பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை மக்களுக்காக  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4,400 ரூபாயை அச்சிறுமி கையளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5