2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'இலங்கையில் தொடங்கவுள்ள நற்பணி'

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது உயிரிழந்த தனது சகோதரன், சகோதரியின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைய ஸ்தாபிக்கவுள்ளதாக, பிரித்தானியாவில் வாழும்  உயிரிழந்த இருவரின் சகோதரரான, டேவிட் லின்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது சகோதரர்கள் உயிரிழந்த இடத்தை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த தாக்குதலில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்திக்கொடுத்தல் என்ற வகையில் அறக்கட்டளையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (06) சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .