Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Simrith / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிஓயாவின் காதி நீதிபதி ஒருவர், ஏப்ரல் 21 ஆம் திகதி லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, மனுதாரரின் மகன் மற்றும் மருமகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, மனுதாரரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் பணம் கோரியதாக கூறப்படுகிறது. விவாகரத்துக்கான தீர்ப்பு ஏப்ரல் 19 அன்று காதி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் மனுதாரரை தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, விவாகரத்து தீர்ப்பு மற்றும் சட்ட அனுமதிகளையும் உடனடியாக வெளியிடுவதற்கு பணத்தை தனது அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு கோரியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் முதலில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025