2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இலவச தடுப்பூசிகளை தடுத்தது யார்?

R.Maheshwary   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவிருந்த 6 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவிடாமல் தடுத்த விசேட வைத்தியர் ஒருவர் தொடர்பில் விசாரணை நடத்த, ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, வைத்திய தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீன தடுப்பூசி தொடர்பான பொய் பிரசாரங்களால், குறித்த வைத்திய நிபுணர் சீனாவால் வழங்கப்படவிருந்த தடுப்பூசி குறித்து அலட்சியப் போக்கைக் கடைபிடித்தார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வைத்தியர் முன்வைத்த காரணங்களின் அடிப்படையில், அப்போது சீனா வழங்கிவிருந்த தடுப்பூசிகளை இலங்கை ஏற்க மருத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 இலட்ச தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால், இன்றைய கொரோனா நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .