2026 மார்ச் 05, வியாழக்கிழமை

ஈரானின் தாக்குதலில் இலங்கையர்களுக்கும் காயம்

Freelancer   / 2026 மார்ச் 02 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் கடந்த சில தினங்களாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. 

இது குறித்து அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் விபரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .