Editorial / 2025 மார்ச் 07 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூளை இருப்பதாகவும், அவர் தொடர்பில் தனக்குத் தெரியும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.
கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
"இங்கே ஒரு மூளையாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நீங்கள் இப்போது மூளையாக இருப்பவர்களை தேடுகிறீர்களா? மூளையாக இருந்தவரை எனக்கு தெரியும் என்று நான் பொறுப்புடன் சொல்ல முடியும். ஆனால் நான் ஊடகங்களுக்கு சொல்ல மாட்டேன்."
நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் சொல்லுமாறு ஒரு ஊடகம் சொல்கிறது. ஒரு சூத்திரதாரி இருக்கிறான். எனக்குத் தெரியும், சூத்திரதாரி ரகசியம் தெரிந்துவிட்டது. மூளையாக செயல்பட்டவருக்கு அவர் எங்கிருந்தார் என்பது தெரியும். மூளையாக செயல்பட்டவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு தெரியும். சஹ்ரானுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பது மூளையாக செயல்பட்ட அவருக்குத் தெரியும். அவர் தற்கொலைக்கு எப்படி வழிநடத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் என்றார்..
" அவர்களின் பெயர்கள் மற்றும் குடும்ப பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்வேன் எனினும், அப்புஹாமி மற்றும் கருணாவதியிடம் சொல்வதில் பயனில்லை” என்றார்.
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago