Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 08 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு, விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, நேற்று (07), நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த இழப்பீட்டை வழங்குவதற்காக, பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த விசேட பொருளாதார பொதி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இதற்கமைய காயமடைந்தவர்கள், நீண்டகால அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்டஈடு தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பட்டுள்ளது என்றும் இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் இணைந்த துறைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிவாரணங்கள் நிதியமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம், மத்திய வங்கியின் ஆளுநர் ஊடாக சகல வங்கிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இலங்கை தொடர்பில் வித்திருந்த பயண எச்சரிக்கையை நீக்கியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
2 hours ago