2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் உயிரோடு?

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிரித்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ​மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் என்ற நபர், இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், சஹ்ரான் என்பவர் உயிரிழந்தார் என்றே கூறப்பட்டது. இருப்பினும், குண்டுதாரியின் புகைப்படத்துக்கு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் தோற்றத்துக்கும் தொடர்பில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, மாவனெல்ல பிரதேசத்தில், புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களிலும், மேற்படி சஹ்ரான் என்பவரே தொடர்புபட்டிருந்தார் என்றும், பாதுகாப்புத் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவத்துக்கு மேலும் இருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும் மொஹமட் இப்ராஹிம் சஹீட் (வயது 27), மொஹமட் இப்ராஹிம் சாதிக் ஆகியோரே, அவ்விருவராவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .