Freelancer / 2026 மார்ச் 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், போதியளவு நீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். (a)
39 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
1 hours ago