2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

எழுதாரகை படகை அப்புறப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு சரச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த படகு நீண்ட காலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதனால் பொது மக்கள்​  நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்ததோடு காயங்களுக்கும் ஆளாகியிருந்தனர். 

இந்நிலையில் இன்று அனலைதீவு பிரதேசத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம், குறித்த படகை அப்புறப்படுத்தி தருமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்துடன், அதனை அகற்றுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .