Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியன் நம் நாட்டுக்கு நேராக உச்சம் பெறவுள்ளதால், உங்கள் நிழல் 2025 ஏப்ரல் 5 முதல் 15 வரை சிறிது நேரம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
வானியலாளர் அனுர சி பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயை. ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது.
அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது.
அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்."
"4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார். R
40 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
53 minute ago