2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்க்கட்சியாக முடியாது’

Kamal   / 2020 ஜூலை 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)  

ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக்கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலையில்,  இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசிய கட்சி புதுவழியை நோக்கி பயணிக்க முயற்சித்தாலும் அதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளதென தெரிவித்த அவர்,   சஜித்துடன் 80 வீதமானோரும், ரணில் பக்கம் 20 வீதமானோரும் உள்ளனர். எனவே, ஐக்கிய தேசியக்கட்சியால் மீண்டெழமுடியாது என்றார். 

அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பெறும் ஆசனங்களைவிட, சஜித் அணி குறைவாகவே பெறும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைகூட பெறமுடியாத நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தள்ளப்படும் என்றார். 

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன' இணைந்துகொண்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வதைகொடுத்தனர். அப்படியானவர்கள் இன்று எம்பக்கம் வந்துள்ளனர். இதனால்தான் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .