Freelancer / 2025 நவம்பர் 21 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இருவர் உட்பட 8 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 8 பேரில் இருவர் நீண்டகாலமாக ஐஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாடகைக்கு அறைகளையும் பெற்று தங்கியிருந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரிடம் இருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய 6 பேரிடம் இருந்தும் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago