2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

​கஞ்சாவுடன் நால்வர் கைது

Editorial   / 2019 மார்ச் 30 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கப் ரக வாகனமொன்றில், ஒரு தொகை கஞ்சாவைக் கொண்டுசென்ற நான்கு சந்தேகநபர்களை, மன்னாள் பெருக்களம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின், மன்னார் முகாம் அதிகாரிகளும் பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போ​தே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, 1 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

​கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், மன்னார் பொலிஸாரிடம், ​மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X