2026 மார்ச் 02, திங்கட்கிழமை

கட்சித் தலைவர்களுக்கு சஜித் அவசர அழைப்பு

Editorial   / 2026 மார்ச் 02 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அவசர கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு, புதன்கிழமை (03) அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் நமது நாட்டு மக்களில் நலன்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடி, இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரப்பதையும் நோக்கமாகக் கொண்டே இக்கூட்டம் இடம்பெறுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .