2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடனை திருப்பிச் செலுத்தாத வேட்பாளர் கைது

Janu   / 2025 மே 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தேகெதிபொத்தான பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.   

குறித்த வேட்பாளர் 2023 இல் எடுத்த 29,500.00 ரூபாய்  விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X