Simrith / 2025 நவம்பர் 05 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த கடற்கரைப் பகுதியில் இன்று காலை மிதந்து வந்த, 10 போதைப்பொருள் பொட்டலங்கள் அடங்கிய ஒரு பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுகுருந்தவில் உள்ள பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) முகாமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தப் பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசோதித்ததில், பொதியில் 11.9 கிலோ ஹஷிஷ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களையும், இந்த போதைப்பொருள் பொதியுடன் தொடர்புடைய பிற விவரங்களையும் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago