Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், கடற்பரப்பைச் சுற்றிலும் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கி.மீ (55-60 மைல்) வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் கடல் கொந்தளிப்பாகவும் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
1 hours ago