Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, நிலவும் அதிக வெப்பநிலையால் வெப்பத் தடிப்புகள் (Heat rashes), தோலில் எரிச்சல் மற்றும் பூஞ்சை தொற்று (Fungal infections) போன்ற பொதுவான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிறுவர்களின் தோல் மிகவும் மென்மையானது என்பதாலும், அவர்கள் வெளியில் அதிக நேரம் விளையாடுவதாலும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதிகப்படியான வெப்பம் சிறுவர்களிடையே நீர் சத்து குறைபாட்டை உண்டாக்கும் எனவும், இதனால் தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
நேரடி சூரிய ஒளியில், குறிப்பாக பகல் நேரத்தின் வெப்பம் அதிகமான வேளைகளில் சிறுவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், அதிகளவில் தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை அருந்துவதை ஊக்குவிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026