2025 ஜூன் 28, சனிக்கிழமை

கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (17) சந்தித்து பேசவுள்ளது.

முற்பகல் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இன்னும் இரண்டு வாரங்களில் திகதி அறிவிக்கப்படும் என, தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .