Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கணவனுக்கு 2ஆவது திருமணத்தை முன்னின்று அவரது மனைவியே நடத்தி வைத்துள்ளார்.
திருமணத்தின் பின், புது மனைவியும் கணவனும் முதல் மனைவியும் எங்கு சென்றார்கள் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்தனர்.
சில மாதங்களாக விமலா சோகமாக இருந்து உள்ளார். ஏன் என்று விமலாவிடம் பலமுறை கல்யாண் கேட்டு உள்ளார்.
அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார்.
கல்யாண் திருமணத்துக்கு முன் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார். அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். சில காலம் நன்றாக இருந்த காதல் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.
திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று விவரத்தை கூறி உள்ளார். கடந்த காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும், அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் கதறி அழுதாள்.
எப்படியும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள். எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார்.
விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார்.
கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது இங்கு சிறப்பு. கணவரின் இரண்டாவது திருமணத்தில் விமலா முக்கியப் பங்கு வகித்தார். கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
ஆனால் திருமணம் முடிந்து மூவரும் எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆகிவிட்டது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago