2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கண்டியை பாரிய நகரமாக்குவேன்: ரணில்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 29 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியை மற்றுமொரு பாரிய நகரமாக உருவாக்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாநகர அபிவிருத்தித் திட்டங்களை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'நீங்கள் வாழக்கூடிய பெருநகரமொன்றை இந்திய சமுத்திரத்தின் மத்தியில் நாம் அமைக்கவிருக்கின்றோம். மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம். அதுவே இந்த மாநகரத் திட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்தின் ஊடாக, சர்வதேசத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இலங்கையை ஒரு கேந்திர நிலையமாக அமைத்து, அதனூடான நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும். இதன்மூலம், எதிர்வரும் 2030ஆம் ஆண்டில், அதிக வருமானம் கொண்ட நாடாக இலங்கை மாறும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X