2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

காதலியை கடலில் தள்ளிவிட்ட காதலன் கைது

Janu   / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலனால் கடலில் தள்ளப்பட்ட காதலியின் தலை பாறையில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (29) பிற்பகல் பயாகல தியலகொட  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பஹல்கொட, பயாகல பிரதேசத்தை சேர்ந்த  19 வயதுடைய தருஷி செவ்மினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த காதல் ஜோடி  பயாகல தியலகொட பிரதேச கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும் ​போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு  எல்லை மீறியதையடுத்து, இளைஞன் தனது காதலியை கடலில் தள்ளிவிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X