2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கப்பல் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம்

R.Maheshwary   / 2021 ஜூன் 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

அத்துடன் அக் கப்பலின் குரல் தரவு பதிவு சாதனமானது voice data recorder, குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சரக்குக் கப்பல் தொடர்பான நிறுவனம் ஊடாக இந்த சாதனம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இந்த குரல் பதிவு தரவுகள் அவசியமானதென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .