S.Renuka / 2026 பெப்ரவரி 26 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.
வழக்கின் பின்னணி: சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ (Neeiye Vidai) என்ற நிறுவனம், கமல்ஹாசனின் உருவம் மற்றும் அவரது படங்களில் இடம்பெற்ற பிரபல வசனங்களைப் பொறித்த டி-ஷர்ட்டுகள் மற்றும் சட்டைகளை அவரது அனுமதியின்றி விற்பனை செய்து வந்தது. தனது 'ஆளுமை உரிமையை' (Personality Rights) மீறி, அனுமதியின்றித் தனது அடையாளத்தைப் லாப நோக்கில் பயன்படுத்துவதாகக் கூறி கமல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு: இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏற்கனவே இந்தச் செயலுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
எதிர்மனுதாரர் தரப்பில் (நிறுவனம் சார்பில்) யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து நீதிபதி அதிரடியாக ஆணையிட்டார்.
பிரபலங்களின் நற்பெயரையும் அடையாளத்தையும் அவர்களின் அனுமதியின்றி வணிகத்திற்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026