Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பிரபலமாகிய நாமல் குமார, கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் டெய்லி மிரர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்தவை வினவிய போது, கர்தினாலிடம் CID வாக்குமூலம் பதிவு செய்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வசம் உள்ள ஒரு ஒலிப்பதிவு கார்டினல் ரஞ்சித்தின் நடத்தை குறித்து விமர்சிப்பதாக நாமல் குமார கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “எனது இச் செயற்பாடு கர்தினாலைப் பாதுகாப்பதே தவிர, அவர் மீது சேறு பூசுவது அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், டெய்லி மிரர் ராமநாயக்கவைத் தொடர்பு கொண்டபோது, கர்தினால் ரஞ்சித் பற்றிய ஒலிப்பதிவு கிளிப் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறினார். “கர்தினால் ரஞ்சித்தின் நடத்தை பற்றிய ஒலிப்பதிவு கிளிப் எதுவும் என்னிடம் இல்லை. சில நபர்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி என் உட்பட சிலர் மீது சேறு பூசுவதற்கு அவ்வாறு போலியான ஒன்றை உருவாக்கி இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
"நான் நாமல் குமாரவை ஒருபோதும் சந்தித்ததில்லை, யாருக்கும் ஒலிப்பதிவு கிளிப்களை வழங்கவில்லை, சமூக ஊடகங்களில் எந்த கிளிப்களையும் வெளியிடவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
கர்தினாலை அவமதிக்கும் வகையிலான எந்த ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருந்தாலும் அவற்றை ஒப்படைக்குமாறு சில யூடியூப் சனல்கள் மற்றும் சில தொலைக்காட்சி சனல்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற இலக்கம் 8 தரங்க மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.
கர்தினால் மற்றும் தேவாலயத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அருட்தந்தை ஜூட் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago