2025 மே 22, வியாழக்கிழமை

கராத்தே சம்பியன் படுகொலை: மூவர் விடுதலை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 35 பேரில், மூவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 35 பேரும், அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்திய போது நீதவான் உமேஷ் கலன்சூரியவே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மூவரை தவிர ஏனைய சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X