2025 ஜூன் 18, புதன்கிழமை

கலால் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட எண்மர் கைது

Editorial   / 2020 ஜூலை 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கலால் திணைக்களத்தில் கடமையாற்றும் கொன்ஸ்டபிள் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொன்ஸ்டபிள் அநுராதபுரம் கலால் தி​ணைக்களத்தில் கடமையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 4 பெண்களும் உள்ளடங்குவதாகவும் இன்று அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .