2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கலேவல வாகன விபத்தில் 11 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரகொல்ல பிரதான வீதியின், ஹொம்பாவ பிரதேசத்தில் இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்து கலேவல, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வானொன்றும் கோழிப் பண்ணைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஓட்​டோவொன்றும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்​​டோ, மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 3 ஆண்களும் 8 பெண்களும் காயமடைந்துள்ளனரென, கலேவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .